பார்த்துக்கொண்டிருப்பார்கள்
அதனால்தான்
அவசரமாய்..
முழுகி, முந்தானையில்
முழு உடல் துடைத்து,
முழங்காலுக்கும் திரவியம் இட்டு
முட்காட்டுக்குள் செல்ல தயாராகின்றேன்,,
என் ஒற்றை
ஒரு வயது குழந்தை அழுகிறான்
அரவணைத்து பால் கொடுத்து
முகம் கழுவி, திலகம் இட்டு
முத்தமும் கொடுத்து
கிழவியிடம் கையளித்து -பத்திரம்
என்று கூறி புறப்படுகிறேன்..
நான் செல்லும் பாதை
என் வாழ்க்கை போல
கரடு முரடானது தான்
என்று விளங்கித்தான்
புறப்பட்டேன் ..
என் பாதையில்
முட்கள் சிலவேளை
என் பாதத்தை பதம் பார்க்கலாம்
சில மரக்கிளைகளும்
என் அங்கம் பிய்த்து விளையாடலாம்
தெரிந்துதான் செல்கின்றேன்..
வழிமேல் விழி வைத்து பார்த்திருப்பார்கள் -
அந்த பாழ் வீட்டில்
பாடாய் படுத்துவார்கள்
ஒருவரல்ல மூவர் என்று
கேட்டும்தான் போகின்றேன்..
எனக்காய்
என் தாய்க்காய்
என் குழந்தைக்காய்
இப்படித்தான் அடிக்கடி
என்னை நான் விற்கின்றேன்.
Saturday, January 23, 2010
நானும் வியாபாரி..
Posted by kavithaikal at 9:32 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment