அவளிடம் விருப்பம் கேட்டு அவன் எழுதினான்...
என் கண்ணே!, மணியே!, முத்தே!,
நீ அழகிய பூ
நான் வண்டாகி உன்னில்
தேன் குடிக்க விரும்புகிறேன்!
நீ எனக்கு கிடைக்க இருக்கும்
மிக பெறுமதியான வைரம்..
உன்னை கண் கலங்காது
காப்பதுஎன் கடமை..
உன் விருப்பம் சொல்லி
என்னை தேனில் மூழ்கடி...
அவள் அவனுக்கு எழுதினாள்...
போடா நாயே!
ஆசை வார்த்தையில்
அடிமைத்தனம் கண்டேன்
பொய்களை நம்ப
பேதை அல்ல
பேசாமல் இருக்க
பூவும் அல்ல
நான் ஒரு "பெண்"!
Saturday, January 23, 2010
பெண் விருப்பம்!
Posted by kavithaikal at 10:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment